தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மக்களுக்கு பாஜக அரசு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியும், தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சியும் அமையும் என்றும் அவர் கூறினார்.
அசாம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும், கேரளத்தில் பாஜக ஆட்சி எதிர்கால வளர்ச்சியின் தொடக்கமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
















