கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இதுவரை எல்லா கருத்து கணிப்புகளையும் உடைத்தே அதிமுக ஆட்சி அமைத்துள்ளது எனவும், ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்து கணிப்புகளை உடைத்தெறிந்து, வீறுகொண்டு எழுவதுதான் அதிமுகவின் தனித்தன்மை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து கணிப்புகள் என்ற பெயரில் திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாகவும், திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது எனவும் கூறியுள்ளார்.
திமுக வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்க திமுகவினர் முயற்சி செய்வார்கள் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் மக்கள் விரோத, நிர்வாக திறனற்ற திமுக ஆட்சி அமைய போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்…
















