தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டபுள் என்ஜின் அரசு அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும் என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஹரியானாவில் கருத்து கணிப்புகளை மீறி பாஜக வென்றதாகவும் அவர் கூறினார்.
அண்ணாமலைக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு நிச்சயம் கொடுப்பார்கள் என எல்.முருகன் பதிலளித்தார்.
















