தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தவெக கட்சிக்கு வாக்களிக்க பெற்றோரை வற்புறுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய், குழந்தைகளை தூண்டியதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரை ஆய்வு செய்த ஆணையம் தவெக தலைவர் விஜய்யின் இந்த செயல் தேர்தல் விதிமுறைகளுக்கும், இளஞ்சிறார் நீதி சட்டத்திற்கும் எதிரானது என தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோக்களை அகற்றவும், விஜய் மற்றும் அவரது கட்சியின் பரப்புரை குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் தமிழக டிஜிபிக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட கட்சிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
















