உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
உத்தரப்பிரதேசத்தில் கங்கா அதிவிரைவு சாலையை திறந்து வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கைகோர்த்து நிற்பதாக தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன்மூலம் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக குறிப்பிட்டார்.
உத்தரபிரதேச மக்களுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை சமாஜ்வாதி கட்சி கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி சமாஜ்வாதி கட்சிக்கு பிடிக்கவில்லை என்றும், இம்மாநிலத்தை மீண்டும் பழைய காலத்திற்கு பின்னோக்கி இழுத்து செல்ல சமாஜ்வாதி கட்சி விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி வாக்களித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
















