மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
IANS – Matrize வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 146 முதல் 161 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்கள் வரையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.சி டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 138 முதல் 159 இடங்கள் வரையிலும், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 131 முதல் 152 இடங்கள் வரையிலும் கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 2 இடங்கள் வரையும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
P-Marq வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 150 முதல் 175 இடங்கள் வரையிலும் திரிணாமுல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்கள் வரையும் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Praja Poll வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 178 முதல் 208 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 110 இடங்கள் வரை கைப்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Poll Dairy வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 142 முதல் 171 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 99 முதல் 127 இடங்கள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















