புதுச்சேரியில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்குமென தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் யார் ஆட்சி? என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, Peoples pulse நடத்திய கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. கூட்டணி 16 முதல் 19 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 12 இடங்களும், தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும், பிற கட்சிகள் 2 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜேவிசி டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில், என்.டி.ஏ. கூட்டணி 15 முதல் 17 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 13 இடங்கள் வரையிலும், தவெக ஒன்று முதல் 2 இடங்கள் வரையும் கைப்பற்றப்கூடும் என கூறப்பட்டுள்ளது.
Axis- My India வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. கூட்டணி 16 முதல் 20 தொகுதிகள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 8 இடங்கள் வரையிலும், தவெகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 3 முதல் 7 இடங்கள் வரை கைப்பற்றலாம் என்றும் கணித்துள்ளது.
சாணக்யா நடத்திய கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. கூட்டணி 17 முதல் 20 தொகுதிகள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 9 முதல் 13 இடங்கள் வரையும், தவெ.க ஒரு தொகுதியில் வெற்றி பெறக்கூடும் என கூறியுள்ளது.
















