சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டுக்குப்பின், கச்சா எண்ணெய் பேரல் 120 டாலர்களை எட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றம் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 120 முதல் 122 டாலர்கள் வரை சென்றுள்ளது.
















