வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!
Jul 29, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மீது விசாரணை இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது பதிவு செய்யப்படும் அடிப்படை ஆதாரமற்ற முதல் தகவல் அறிக்கைகளால், தேவையில்லாத குழப்பங்களும், அழுத்தங்களும் ஏற்படுகிறது. ஆகவே, விசாரணை இன்றி வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது. வணிகர்கள் மீதான அடிப்படை ஆதாரமற்ற வழக்குகளை தவிர்க்கும் நோக்கிலும், வழக்கின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த புதிய உத்தரவின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் இனி வணிகர்கள், தொழில் முனைவோருக்கு எதிராக யாரும் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தவும், எளிதாக வணிகம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு உத்தரப் பிரதேசத்தில் தொழில், வணிகத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மாநிலத்தில் தொழில்களை நிறுவ 25 புதிய துறைசார் கொள்கைகளை அமல்படுத்தியது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் இருக்கும் தொழிலதிபர்கள் 36 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: UP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

Next Post

இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies