வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மீது விசாரணை இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது பதிவு செய்யப்படும் அடிப்படை ஆதாரமற்ற முதல் தகவல் அறிக்கைகளால், தேவையில்லாத குழப்பங்களும், அழுத்தங்களும் ஏற்படுகிறது. ஆகவே, விசாரணை இன்றி வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது. வணிகர்கள் மீதான அடிப்படை ஆதாரமற்ற வழக்குகளை தவிர்க்கும் நோக்கிலும், வழக்கின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த புதிய உத்தரவின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் இனி வணிகர்கள், தொழில் முனைவோருக்கு எதிராக யாரும் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தவும், எளிதாக வணிகம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு உத்தரப் பிரதேசத்தில் தொழில், வணிகத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மாநிலத்தில் தொழில்களை நிறுவ 25 புதிய துறைசார் கொள்கைகளை அமல்படுத்தியது. இதன் மூலம், உலகம் முழுவதிலும் இருக்கும் தொழிலதிபர்கள் 36 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: UP CM Yogi Adityanath
Share
Tweet
SendShare
Previous Post

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

Next Post

இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies