சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து: கதறும் இம்ரான் கான் மனைவி!
Mar 16, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து: கதறும் இம்ரான் கான் மனைவி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆகவே, அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி, பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி, எதிர்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, மோசடி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் முக்கியமானது தோஷகான எனப்படும் பரிசுப் பொருட்கள் ஊழல்.

அதாவது, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, உலகத் தலைவர்கள் பலரும் பரிசாக வழங்கிய பொருட்கள் அரசு கஜானாவில் சேர்க்காமல், வெளிநபர்களுக்கு விற்று பணமாக்கி, அதை மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்பது நிரூபணமான நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான், பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், கடந்த 10-ம் தேதி இம்ரான்கானை சிறையில் சந்தித்த அவரது மனைவி புஷ்ரா பீவி, சுமார் அரை மணி நேரம் பேசிவிட்டு வந்தார். அப்போது, செய்தியாளரிகளிடம் பேசிய புஷ்ரா பீவி, தனது கணவர் மிகவும் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சி கிளாஸ் வசதி மட்டுமே செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதிலும், இம்ரான் மன உறுதியுடன் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கத் தயாராக இருப்பதாகவும், எக்காரணத்துக்காகவும் அடிமைத்தனத்துக்கு அடிபணிய மாட்டார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், சிறையில் தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சிறையை மாற்ற வேண்டும் என்றும் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “எவ்வித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற உத்தரவின்படி எனது கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும். மேலும், எனது கணவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அதோடு, நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.

ஆகவே, அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சிறையில் பி கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலங்களில் எனது கணவரை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது. இதில் தொடர்புடையக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆகவே, எனது கணவர் உயிருக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது. சிறையிலே கூட எனது கணவர் விஷம் வைத்துக் கொள்ளப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. எனவே, வீட்டில் சமைத்த உணவை எனது கணவருக்கு வழங்க அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீவி மீதும் தோஷகானா வழக்கு உள்ளது என்பதும், இதன் காரணமாக அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!

Next Post

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது – ரோஸ்கோஸ்மோஸ் அறிவிப்பு

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies