ஆண்டு தோறும் டெல்டா பாசத்திற்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . மேட்டூர் அணை கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.70 அடியிலிருந்து 55.14அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியிலிருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 21.20 டிஎம்சி ஆக உள்ளது.