அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியச் சுதந்திரத் தின நிகழ்ச்சியில் ஆன்மிகக் குரு ரவிசங்கர், நடிகர்கள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம் மற்றும் இந்திய அமெரிக்கர்கள் பலர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
நியூயார்க் நகரில் இந்தியக் கூட்டமைப்பு சங்கத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட பலர் இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறும், சிறப்பு உடைகளை அணிந்துக் கொண்டும், கலைஞர்கள் இசை நிகழ்ச்சியுடன், நடனம் ஆடியும் டிரம்ஸ் வாசித்துக்கொண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த அணிவகுப்பு இந்தியாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் கலாச்சாரங்கள், தேசபக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக செயல்பட்டது.
இந்த அணிவகுப்பின் போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இந்தியத் தேசியக் கொடியை அசைத்தவாறு உற்சாகமாகக் காணப்பட்டனர்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வாலும் அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். “இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக உணர்வுகளைப் பகிர்ந்துக் கொண்டுள்ளதாகவும், இது உலக நன்மைக்கான சக்தியாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
புவியின் மீது அக்கறை இருந்தால் நாம் வாழும் முறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும்.
நடிகை சமந்தா பேசிய போது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வளமான பிரதிநிதித்துவத்தைப் பார்ப்பது ஒரு மரியாதை என்று கூறினார். இன்று நான் இங்கு இருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை எனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எவ்வளவு செழுமையானது என்பதை நீங்கள் எனக்கு உணர்த்தி உள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அர்ஜுன் ராம்பால், அபிஷேக் பச்சன், தமன்னா பாட்டியா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு உள்ளனர்.