சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?
Jan 14, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 23, 2023, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை இரண்டு விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதை இதில் காண்போம்.

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் திட்டமான சந்திரயான்-1 கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-1 செயற்கைக் கோள் தயாரிப்புக்கு 470 கோடி ரூபாய் செலவு செய்யபட்டது.

அதன் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிக எதிர்பார்ப்புடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியில் கடைசி கட்டத்தில் இத்திட்டம் தோல்வியடைந்தது.

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்- 2 திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 978 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. சந்திரயான் -2 தோல்வி அடைந்த நிலையில் அதில் ஏற்பட்ட தவறுகளையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் திருத்திக்கொண்டு இஸ்ரோ கடந்த ஜூலை -14 ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் ஏவியது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்திற்காக மொத்தம் 615 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 திட்டத்தில், செயற்கைகோளை வடிவமைக்க 375 கோடி ரூபாயும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், நேவிகேசன் உள்ளிட்டவைகளுக்காக 603 கோடி ரூபாயும் செலவானது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டை வடிவமைக்க 365 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், நிலவுக்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவும் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை கருவிகளுக்காக வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.

சந்திரயான் -2 இல் ஏவப்பட்ட ஆர்பிட்டர் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவை சுற்றி வருகிறது. தற்போது சந்திரயான் 3 இல் ஏவப்பட்டுள்ள லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகள், ஏற்கனவே நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக சந்திரயான் 3 திட்டத்தில் ஆர்பிட்டர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. மேலும், விண்கலத்தின் அமைப்பை எளிமைப்படுத்துவது, கடினமான பெரிய அமைப்புகளை குறுக்குவது, எந்த பொருளில் இருந்தும் அதிகபட்ச பயனை பெற முயல்வது ஆகியவற்றைப் பின்பற்றுவதால் மற்ற நாடுகளை விட குறைந்த செலவில் நிலவு குறித்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்த முடிவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: isro moon mission chandrayaan 3chandrayaan-3budgetChandrayaan 3chandrayaan 3 moon mission
ShareTweetSendShare
Previous Post

சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும் 2 தி.மு.க. அமைச்சர்களுக்கு சிக்கல்!

Next Post

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies