சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும் 2 தி.மு.க. அமைச்சர்களுக்கு சிக்கல்!
Aug 12, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும் 2 தி.மு.க. அமைச்சர்களுக்கு சிக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறது. இதன் மூலம் பொன்முடியைத் தொடர்ந்து, மேலும் இரு அமைச்சர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன். இவர், 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து, இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2012-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அமைச்சர் தரப்பில் போதுமான வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், மூவரையும் கடந்த மாதம் 20-ம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல, தற்போது நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, 2006 – 2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது 2012-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தங்கம் தென்னரசுவையும், அவரது மனைவி மணிமேகலையையும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நிலையில்தான், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட இரு வழக்குகளையும், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், அதை மறுவிசாரணைக்கு எடுத்த அதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான் இவ்விரு வழக்குகளையும் மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. சுப்பனுக்கும், குப்பனுக்கும் உரித்தானது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் பின்பற்றப்பட்ட நடைமுறை மிகவும் தவறானது.

யார் அதிகாரத்துக்கு வந்தாலும், வழக்கை நீர்த்துப்போகவே செய்கின்றனர். இவ்விரு வழக்குகளின் தீர்ப்பை படித்துவிட்டு என்னால் 3 நாட்களாக தூங்க முடியவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தின் மனச்சாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: chennai high court
Share
Tweet
SendShare
Previous Post

சந்திரயான்-3 விண்கலம் தரையிறக்கம்: இணையவழியில் பிரதமர் பார்வையிட ஏற்பாடு!

Next Post

சந்திரயான் 3 தயாரிக்க செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies