“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!
Aug 21, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!

இன்று வரலாறு படைக்கப்படும், சந்திரனில் மூவர்ணக்கொடி பறக்கும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 23, 2023, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால், சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக சுற்று வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இதற்கான முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்திய மக்களும், உலக நாடுகளும் சந்திராயன்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல, சந்திரயான்-3 விண்கலம் நல்லபடியாக தரையிறக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால், இந்தியா புதிய வரலாறை படைக்கும்.

இந்த நிலையில்தான், இன்று இந்தியா வரலாறு படைக்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “இன்று வரலாறுப் படைக்கப்படும். சந்திரனின் மேற்பரப்பில் இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி பறக்கும். இதை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், நமது விஞ்ஞானிகளின் அயராத முயற்சியாலும் நமது நாடு இன்று வரலாற்றை எழுதவுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, இந்தியாவின் 3-வது சந்திரப் பயணம் வெற்றிபெற, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களது விண்வெளித் திட்டத்தால் நாடு முழுவதும் பெருமிதம் கொள்கிறது. எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. இத்திட்டதிற்காக பெரு முயற்சி எடுத்த விஞ்ஞானிகள் உட்பட அடிமட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று நாம் புதிய வரலாறை படைக்கவிருப்பதற்கு அவர்களின் கடின உழைப்புதான் காரணம்.

அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு நான் தலைவணங்குகிறேன். அவருடைய தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் தடைகளை உடைத்து புதிய சாதனை படைத்து வருகிறது. இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய நாள். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய நாள்” என்று தெரிவித்தார்.

Tags: Chandrayaan 3chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

Next Post

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies