போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!
Aug 15, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதம் உட்பட முக்கியப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பான தேசியப் பாதுகாப்பு மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று தொடங்கியது.

2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகவும், நேரடியாகவும் பங்கேற்கிறார்கள்.

தேசியப் பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து விதமான தேசியப் பாதுகாப்பு வழிமுறைகளையும் வலுப்படுத்தும். குறிப்பாக, போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆகவே, போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப் பொருள் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மாவட்டக் காவல் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விசாரணைகளில் அறிவியல்பூர்வ தொழில்நுட்பத்தைக் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இம்மாநாடு குறித்து உள்துறை அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாட்டில் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்களை, காவல்துறைத் தலைவர்கள், நிபுணர்கள், உயரதிகாரிகள் ஒன்று சோந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல் நாள் மாநாட்டில், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப் பொருள்களுக்கான சட்டவிரோத நிதிப் பரிமாற்றந்தைத் தடுப்பது, சமூக ரீதியிலான சவால்கள், அணுசக்தி மற்றும் கதிரியக்கத் தாக்குதலின்போது கையாள வேண்டிய அவசரக் கால நடவடிக்கைகள், இணையவழிப் பாதுகாப்பு, விசாரணைகளில் தடய அறிவியல் சோதனையின் பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Next Post

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவன் பலி- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies