போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதம் உட்பட முக்கியப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பான தேசியப் பாதுகாப்பு மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று தொடங்கியது.

2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகவும், நேரடியாகவும் பங்கேற்கிறார்கள்.

தேசியப் பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து விதமான தேசியப் பாதுகாப்பு வழிமுறைகளையும் வலுப்படுத்தும். குறிப்பாக, போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆகவே, போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப் பொருள் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மாவட்டக் காவல் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விசாரணைகளில் அறிவியல்பூர்வ தொழில்நுட்பத்தைக் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இம்மாநாடு குறித்து உள்துறை அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாட்டில் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்களை, காவல்துறைத் தலைவர்கள், நிபுணர்கள், உயரதிகாரிகள் ஒன்று சோந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல் நாள் மாநாட்டில், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப் பொருள்களுக்கான சட்டவிரோத நிதிப் பரிமாற்றந்தைத் தடுப்பது, சமூக ரீதியிலான சவால்கள், அணுசக்தி மற்றும் கதிரியக்கத் தாக்குதலின்போது கையாள வேண்டிய அவசரக் கால நடவடிக்கைகள், இணையவழிப் பாதுகாப்பு, விசாரணைகளில் தடய அறிவியல் சோதனையின் பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Next Post

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவன் பலி- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies