2011 உலகக்கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? - கௌதம் கம்பீர்!
Jan 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2011 உலகக்கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? – கௌதம் கம்பீர்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ICC ஆண்கள் ODI உலகக் கோப்பை 2023 விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றிபெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். அதில் கௌதம் கம்பீர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் துணிச்சலாக 97 ரன்களை எடுத்த கௌதம் கம்பீர்,” ஒரு அணியின் வெற்றிக்கான ரகசியம், அந்த அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதில் தான் உள்ளது என்றும், நம் இந்திய நாட்டு கிரிக்கெட் கலாச்சாரத்தில், மக்கள் அனைவரும் ஒரு தனிநபரை மட்டுமே மையமாக கொண்டு போற்றுவதாக முன்பே கூறியிருந்த நிலையில் இப்போது மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார்.

அதை தொடர்ந்து 2011 உலகக்கோப்பையை பற்றி பேசத் தொடங்கினர், ” 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு கேப்டன் தோனி மட்டும் காரணம் இல்லை, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தான் முக்கிய காரணம். ஆனால் தோனிக்கு கிடைத்த முக்கியத்துவம் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” உண்மை என்னவென்றால் உலகக்கோப்பைக்கு முன்பு, தோனி விளையாட்டில் பின்தங்கிருந்தார். அதனால் பேட்டிங் வரிசையில் யுவராஜ் சிங்க்கு பதிலாக 5 ஆம் இடத்திற்கு மாறி சிறப்பாக விளையாடி இந்தியாவை இரண்டாம் உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்றார், நானும் அவருக்குச் சமமாக 97 ரன்கள் எடுத்தேன், இருப்பினும் ஆட்டத்தை வெற்றி பெறவைக்கும் சிக்சரை தோனி அடித்ததால் அவர் என்றும் மக்கள் மனதில் உள்ளார் ” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ” என்னை மறந்துவிடுங்கள், ஆனால் நாம் யாரும் யுவராஜ்க்கு கொடுக்க வேண்டிய பாராட்டை கொடுக்கவில்லை. இறுதிப்போட்டியில் ஜாகீர் கானின் முதல் ஸ்பெல் பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்? யாரும் பேசவில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை குவித்தவர் அவரை பற்றியும், எம்எஸ் தோனி விளையாடிய ஒரு சிக்ஸரைப் பற்றியும் இப்போதும் பேசுகிறோம். ஒரு தனிநபரை மட்டுமே பாராட்டும் போது, நாம் அணியை மறந்துவிடுகிறோம்.

இந்த அறிக்கையில் நான் ஒரு புதிய சர்ச்சையைத் தொடங்க விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் கொண்ட இந்தியா அணி ஒன்றாக செயல்பட்டு விளையாடுவதை உறுதிசெய்ய வேண்டும். 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இந்தியா ஐசிசி கோப்பையை வென்றதில்லை. இந்த முறை சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்” என்று வெளியிட்டுள்ளார்.

Tags: Cricketdhoni
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Next Post

கோவையில் தங்கம் கடத்தியவர்கள் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies