மடகாஸ்கரில் சோகம் - கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!
Sep 16, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மடகாஸ்கரில் சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரியா விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நிகழ்ச்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விழாவினைக் காணும் ஆர்வ மிகுதியில் மைதானத்தின் பிரதான நுழைவாயிலின் வழியாக ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றனர்.

இதனால் மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஏராளமானவர்கள் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்தபடி பலரும் மைதானத்திற்குள் சென்றதால் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடகாஸ்கர் நாட்டின் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பரியா மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கானக் காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

Next Post

ஆசிய 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Related News

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

அமெரிக்கா : சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை!

மெக்சிகோ வெள்ளப்பெருக்கு – வாகனத்தில் சிக்கி தவித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

சீனா : மெட்ரோவில் பாதுகாவலரை தாக்கிய பெண் கைது!

சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies