டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்.

திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

இந்தியாவில் ஊழல் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா மட்டும்தான் சென்றடைகிறது. மீதமுள்ள 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாகத்தான் ‘டிஜிட்டல் இந்தியா’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவிகிதம் பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால், இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை.

முத்ரா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 27 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பலரும் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதனால்தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறார். இதன் மூலம், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன். இதேபோல மாணவர்கள் புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: governor ravi
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Next Post

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies