வெள்ளத்தில் மிதக்கும் அஸ்ஸாம்: 17 மாவட்டங்கள் மூழ்கின!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் அஸ்ஸாம்: 17 மாவட்டங்கள் மூழ்கின!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 17 மாவட்டங்களில் 1.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் முதல், நாடு முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதில், அஸ்ஸாம், இமாச்சல், உத்தரகண்ட், ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடும் வெள்ளப் பெருக்குக்  காரணமாக  இமாச்சல், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இமாச்சல் பிரதேச மாநிலம் முழுவதுமே பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில், 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. மழை வெளத்தில், லக்கிம்பூர் மாவட்டத்தில் 47,400 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 41,000 பேரும், கோலாகாட் மாவட்டத்தில் 28,000 பேரும், சிவசாகர் மாவட்டத்தில் 21,500 பேரும், சோனித்பூர் மாவட்டத்தில் 17,800 பேரும் என மொத்தம் 1.91 லட்சம் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மழை வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேசமயம், அஸ்ஸாமிலும், அண்டை மாநிலமான அருணாச்சல் பிரதேசத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.  இது ஒருபுறம் இருக்க, 42 வருவாய் கிராமங்களில் உள்ள  522 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாகவும், 1.30 லட்சம் வளர்ப்புப் பிராணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 17 மாவட்டங்களில் 8086.40 ஹெக்டேர் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி விட்டதாகவும், 18 முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும்”   தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: himachal pradeshassam floodharyana floodflood
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

பா.ஜ.க.வின் “ஜன் ஆசீர்வாத் யாத்ரா”: அமித்ஷா, பிரதமர் மோடி பங்கேற்பு!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies