பா.ஜ.க.வின் "ஜன் ஆசீர்வாத் யாத்ரா": அமித்ஷா, பிரதமர் மோடி பங்கேற்பு!
Aug 17, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் “ஜன் ஆசீர்வாத் யாத்ரா”: அமித்ஷா, பிரதமர் மோடி பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 08:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ‘ஜன் ஆசீர்வாத் யாத்திரை’யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், 114 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். ஆனாலும், 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், கமல்நாத் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌஹான் முதல்வராகப் பதவியேற்றார்.

2023ஆம் ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. சார்பில் “ஜன் ஆசீர்வாத் யாத்ரா” (மக்கள் தரிசன யாத்திரை) என்கிற யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் 5 இடங்களில் இருந்து 5 “ஜன் ஆசீர்வாத் யாத்திரைகள்” தொடங்குகின்றன. இதில், சட்னா சட்டமன்றத் தொகுதி சித்ரகூட்டில் இருந்து செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தொடங்கும் யாத்திரையையும், செப்டம்பர் 5-ம் தேதி மண்டலாவில் இருந்து தொடங்கும் யாத்திரையையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

செப்டம்பர் 4-ம் தேதி காண்ட்வா மற்றும் நீமுச் ஆகிய பகுதிகளில் இருந்து தொடங்கும் யாத்திரையைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 6-ம் தேதி ஷியோபூரில் இருந்து தொடங்கும் 5-வது யாத்திரையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். மேற்கண்ட யாத்திரைகளில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் பங்கேற்பார். இந்த 5 யாத்திரைகளும் செப்டம்பர் 21-ம் தேதி போபாலை வந்தடைகின்றன.

இந்த 5 யாத்திரைகளுக்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் பூபேந்திர சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த யாத்திரை மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 210 தொகுதிகளில் 10,500 கி.மீ.க்கு மேல் செல்லும். தொடர்ந்து, பா.ஜ.க. நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25-ம் தேதி போபாலில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்” என்று தெரிவித்தனர்.

Tags: PM ModiAmith sha
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ளத்தில் மிதக்கும் அஸ்ஸாம்: 17 மாவட்டங்கள் மூழ்கின!

Next Post

எகிப்தில் பிரைட் ஸ்டார் பயிற்சி: முதன்முறையாக இந்தியப் படைகள் பங்கேற்பு!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies