நொய்யல் நதியை மீட்டெடுப்போம்!- அண்ணாமலை
Jan 14, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நொய்யல் நதியை மீட்டெடுப்போம்!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலைத் தாண்டி, நொய்யலை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம், அருள்மிகு பேரூர் ஆதீன வளாகத்தில், நொய்யல் பெருவிழாவில் கலந்து கொண்டேன். தென்கயிலாய கங்கை என்றழைக்கப்படும் நொய்யல் நதியைச் சீரமைத்து, மீட்டெடுக்க, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில், வணக்கத்திற்குரிய சாதுக்களும், சன்னியாசிகளும் சூழ்ந்த சபையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

2300 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான வரலாறு கொண்ட நதி நொய்யல் நதி. இரு கரைகளிலும் 260 கோவில்கள் அமைந்துள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என நான்கு மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் நிலங்களில் பாசன வசதி வழங்கிய நதி. இன்று தமிழக அரசின் ஆய்வறிக்கையின்படி, 99% பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

நதி நீரில் நச்சுப் பொருள்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. கோவையிலிருந்து கரூர் வரையிலான நொய்யல் நதி ஓடும் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தீர்வு நொய்யல் நதிக்குத் தேவை. இந்தியாவில் தூய்மையான நதிகள் வரிசையில் கடைசியில் இருக்கிறது தமிழகம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, மாசுபடுத்தல் உள்ளிட்டவை நீக்கப்பட வேண்டும்.

நம் நாட்டில் எத்தனையோ நதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில், சபர்மதி நதியை, அன்றைய குஜராத் முதல்வராக இருந்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீட்டெடுத்து, நர்மதை நதியோடு இணைத்து, இன்று சபர்மதி நதி அத்தனை தூய்மையான நதியாக மாறியிருக்கிறது. உலகத்… pic.twitter.com/OyAQhNJxrY

— K.Annamalai (@annamalai_k) August 29, 2023

 

நம் நாட்டில் எத்தனையோ நதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில், சபர்மதி நதியை, அன்றைய குஜராத் முதல்வராக இருந்து நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுத்து, நர்மதை நதியோடு இணைத்து, இன்று சபர்மதி நதி அத்தனை தூய்மையான நதியாக மாறியிருக்கிறது. உலகத் தலைவர்களை, சபர்மதி நதிக்கரையில் சந்திக்கிறார் நமது பிரதமர். தமிழகத்திலும் நொய்யல் நதிக்கரையில் அமர்ந்து, நமது பிரதமர் மோடி உலகத் தலைவர்களோடு பேசும் நாள் வரும். திருவண்ணாமலையில், நாக நதியை பொதுமக்களே ஒன்றிணைந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக, இந்தச் சிறப்பான பணி நிறைவேறியதை, நமது பிரதமர் அவர்கள் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.

தமிழக பாஜகவைப் பொறுத்தவரை, தென் தமிழகத்தில் தாமிரபரணியையும், கொங்கு பகுதியில் நொய்யல் ஆற்றையும், கங்கை நதியை மீட்டெடுத்ததைப் போல சிறப்புப் பணியாக மீட்டெடுக்க, மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக நமது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

நொய்யல் நதியை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கையுடன் அரசியலைத் தாண்டி, நொய்யலை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இன்று நொய்யல் மீட்டெடுக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சாதுக்கள், பாலாற்றிலும், வைகையிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு, பாலாற்றிலும் வைகையிலும் தொடர்ச்சியாக தண்ணீர் வர ஆரம்பித்திருக்கிறது. சிறுதுளி அமைப்பு செய்யும் பணிகள் பெரியவை. நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை மனமாரப் பாராட்டுகிறேன். அரசும், அரசு சாராத அமைப்புக்களும், பொதுமக்களும் சேர்ந்து நொய்யலை மீட்டெடுப்போம் என்று நம்பிக்கை வைப்போம். நொய்யல் நதியை இங்கு வந்திருக்கும் குழந்தைகள் காலத்தில் மீட்டெடுத்திருப்போம் என்று உறுதி ஏற்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

தேசிய விளையாட்டு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Next Post

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் நீடா அம்பானி!

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies