ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் நீடா அம்பானி!
Jul 5, 2025, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகும் நீடா அம்பானி!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குனர்கள் குழுவில், ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நியமிக்க ரிலையன்ஸ் வாரியம் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக இவர்களுக்கு வழிவிடும் வகையில் இயக்குனர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி விலகினார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, ”ஆர்ஐஎல் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம்.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.9,74,864 கோடியாகவும், 2023 ஆம் நிதியாண்டில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் ரூ.1,53,920 கோடியாகவும், லாபம் ரூ.73,670 கோடியாகவும் இருந்தது” என்றார்.

மனிதவள மேம்பாடு, நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஈஷா எம். அம்பானி, ஆகாஷ் எம். அம்பானி, ஆனந்த் எம். அம்பானி ஆகியோரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குனர்கள் குழுவில் சேர்க்க பரிந்துரைத்தது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, பதவி ஏற்கும் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், நிறுவனத்தின் செயல்படாத இயக்குனர்களாக இருப்பார்கள்” என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இயக்குனர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி ராஜினாமாச் செய்துள்ளார். இருந்தாலும் அவர் தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் நிரந்தர அழைப்பாளராகப் பங்கேற்பார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடா அம்பானியின் ராஜினாமாவை இயக்குனர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

முகேஷ் அம்பானி முதன் முதலாக 2021 ஆம் ஆண்டில் தனது வாரிசுகள் குறித்துப் பேசினார். அதன்படி, தனது மூன்று பிள்ளைகளுக்கும் தனித் தனி நிறுவன நிர்வாகங்களை ஒப்படைத்துள்ளார். புதிய ஆற்றல், வணிகம் தொடர்பான நிறுவனங்களைத் தனது இளைய மகன் ஆனந்திடமும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வணிகம் மூத்த மகன் ஆகாஷ்ஷிடமும், மகள் ஈஷாவுக்கு சில்லறை வணிகத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

Tags: nita ambaniambani
ShareTweetSendShare
Previous Post

நொய்யல் நதியை மீட்டெடுப்போம்!- அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies