ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 மாநாட்டால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு முன்னேற்பாட்டுப் பணிகளும், பாதுகாப்புப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகிறது. அந்த வகையில், ஜி20 தலைமைத்துவத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் 9-வது கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி 20 செயலகம் மற்றும் வெளியுறவு, உள்துறை, கலாச்சாரம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்கள், தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஜி20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள், நெறிமுறை, பாதுகாப்பு மற்றும் ஊடகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதன்மைச் செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முதன்மைச் செயலருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கினர். மேலும், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். அதேபோல, நகரில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல, ஜி20 உச்சி மாநாட்டிற்காக, பாரத் மண்டபத்தில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனித்துவமான இந்திய அனுபவத்திற்காக, கலாச்சாரம் மற்றும் ‘ஜனநாயகத்தின் தாய்’ குறித்த கண்காட்சிகள் பாரத் மண்டபத்தில் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்த முதன்மைச் செயலாளர், நடராஜர் சிலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார்.

இது ஒருபுறம் இருக்க, முதன்முறையாக ‘ஜி 20 இந்தியா’ என்ற மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம், பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘புதுமை கண்டுபிடிப்பு மையம்’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா பரிசோதனை மையம்’ மூலம் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் டிஜிட்டல் இந்தியாவை நேரடியாகக் காண்பார்கள். மேலும், லாஜிஸ்டிக்ஸ் தரப்பில் பயிற்சிகள் நடத்தப்பட்டு, வரும் நாட்களில் ஆடை ஒத்திகைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Tags: G20
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Next Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies