இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.
Sep 13, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்  பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வரும் சனிக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “இந்தப் போட்டியின் மூலம் எங்களுடைய அணி வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100% எங்களுடைய பங்களிப்பைக் கொடுப்போம். இந்தியாவுக்கு எதிராகவும் இதே போல் செயல்படுவோம் என நம்புகிறேன். இந்தியாவின் சவாலுக்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “நேபாளத்துக்கு எதிராக முதலில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதற்குக் காரணம் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. எனவே நானும் ரிஸ்வானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முற்பட்டோம். சில சமயம் ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். சிலமுறை நான் அவருக்கு நம்பிக்கை அளிப்பேன். இந்தப் போட்டியில் இப்திகார் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்துள்ளார். நான் அவரிடம் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன். அவர் இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்த பிறகு களத்தில் இயல்பாக இருந்தார். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள்” என்று பாபர் அசாம் கூறினார்.

ஆசியக் கோப்பையில் எந்தப் பயிற்சி ஆட்டமும் இல்லாமல் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டு பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பயிற்சியை எடுத்துவிட்டது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை காண்பித்து வெற்றி வாகை சூடுவார்கள் என்பதே இந்திய இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Asia cup cricket 2023criket indiacricket pakistan
Share
Tweet
SendShare
Previous Post

வாழை மரங்கள் முறிந்து சேதம்!

Next Post

ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies