ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மத்திய அரசு புதிய தகவல்!
Oct 17, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மத்திய அரசு புதிய தகவல்!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் எப்போது சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 31-ம் தேதி அளிப்பதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தப் பணி முடிவடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். இப்பணி முடிந்ததும் தேர்தல் நடத்துவதுக குறித்து தேசிய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் கமிஷன் இணைந்து முடிவு செய்யும்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், தொடர்ந்து நகராட்சி அளவிலும், இதன் பின்னர் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்று காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான். 370-வது பிரிவை நீக்கிய பிறகு தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஊடுருவல் 90.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது” என்று துஷார் மேத்தா கூறினார்.

Tags: supreme courtjamukasmir
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: அரசாணை வெளியீடு

Next Post

ஆதித்யா எல்-1: நாளை கவுண்ட்டவுன் தொடக்கம்

Related News

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!

54-ம் ஆண்டில் அதிமுக – ராயப்பேட்டை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா அன்புமணியுடன் சந்திப்பு – கூட்டணி குறித்து ஆலோசனை என தகவல்!

தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies