ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மத்திய அரசு புதிய தகவல்!
Feb 7, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மத்திய அரசு புதிய தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் எப்போது சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 31-ம் தேதி அளிப்பதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தப் பணி முடிவடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். இப்பணி முடிந்ததும் தேர்தல் நடத்துவதுக குறித்து தேசிய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் கமிஷன் இணைந்து முடிவு செய்யும்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், தொடர்ந்து நகராட்சி அளவிலும், இதன் பின்னர் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்று காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான். 370-வது பிரிவை நீக்கிய பிறகு தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஊடுருவல் 90.2 சதவிகிதம் குறைந்திருக்கிறது” என்று துஷார் மேத்தா கூறினார்.

Tags: supreme courtjamukasmir
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: அரசாணை வெளியீடு

Next Post

ஆதித்யா எல்-1: நாளை கவுண்ட்டவுன் தொடக்கம்

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies