சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!
Jun 6, 2026, 08:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 6, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை அமல்படுத்தப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சராசரி மின் தேவை 16ஆயிரம் மெகா வாட்டாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி 21 ஆயிரத்து 307 மெகா வாட்டாக அதிகரித்தது.

ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையாததால், வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது.

மின் தேவையை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய மின்சாரம் கிடைக்காததால் பல மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, கூறிய தமிழக நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம், தமிழகத்தில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின் தடை, ஒவ்வொரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

அதிகபட்சமாக இரண்டு மணி நேரமும், குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்படுவதாகவும்,இதற்கு, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் இல்லை என்பதே காரணம் எனவும் தெரிவித்தார்.

பூந்தமல்லியில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு எதிரொலியாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.

பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கோடை காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் ஊழியர்கள் அழைப்பை ஏற்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து நள்ளிரவில் மின்வாரிய அலுவலத்திற்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் மின்வெட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: power cut across tamilnaduTamil Nadusummer heat!power cutelectricity demand
ShareTweetSendShare
Previous Post

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Related News

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies