கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் கைதானவர்களை வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்களின் போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் இருவரும் மீண்டும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
















