பணமோசடி வழக்கில் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2011-2015 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடி கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. இதனையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில், அரசின் மூலமாக மட்டுமே ஆளுநருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட வேண்டும் எனக்கூறி அந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்திலும், செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்குமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஒப்புதலுடன், தமிழக அரசின் மூலமாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
















