இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் புதின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா இறையாண்மை கொண்ட நாடாகவும், முற்றிலும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறது என பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தால், அது பூமராங் போல் திரும்பி சென்று தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது எனவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் எனவும் புதின் கூறினார்.
ரஷ்யா உடனான உறவை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவுக்கு சில நாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம்சாட்டிய புதின், இது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்…
















