நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உயரிய ‘நார்வே செஸ்’ தொடரில், சென்னையைச் சேர்ந்த 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடைபெற்றது. இதில், 10வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து, நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே 3-வது மற்றும் 8-வது சுற்றுகளில் கிளாசிக்கல் முறையில் பிரக்ஞானந்தா தோற்கடித்தது இத்தொடரின் மிக உயரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
கடைசிச் சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ தனது போட்டியை ‘டிரா’ செய்த நிலையில், அந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலக சாம்பியன் குகேஷ் போன்ற ஜாம்பவான்களால் கூட இதுவரை வெல்ல முடியாத இந்த ‘நார்வே செஸ்’ கோப்பையை வென்றதன் மூலம், பிரக்ஞானந்தா இந்திய செஸ் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.
















