ராகுல்காந்தி தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளதாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் காந்தி செய்து வருவதாகவும், இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்ததாகவும் தமிழ்நாட்டிலும் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருப்பதாகவும், இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















