திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புவதாக அவர் விளக்கம் அளித்தார்.
















