அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவில் எங்கு எரிவாயு கிடைக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இயோசின் அடுக்கில் ஆயிரத்து 900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது தொடர்ந்து எரிந்த சுடர், அங்கு இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளது.
இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்தமான் கடலில் புதிய எரிசக்தி வாய்ப்புகள் வலுவடைந்து உள்ளதாகவும்.,மத்திய அரசின் சமுத்திர மந்தன் இயக்கம் என்ற தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், உலகளாவிய முன்னணி ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, நாட்டின் ஆய்வு லட்சியங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.
















