இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நமது பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலத்தையும், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் ஜிடிபி உயர்வு பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
















