தமிழக சட்டப்பேரவை வரும் 18ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூட உள்ளதாகவும், இதில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சட்டசபையில் அதிமுகவினர் இரு பிரிவாக செயல்பட்டு புகார் மனு கொடுத்தது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவை அனைத்தும் தனது ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
















