அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பில் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்கும் வகையில் தனது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக தனது அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுடன் மனம் திறந்து உரையாடிய அவர், தங்களின் புதிய இயக்கத்தின் பெயரையும் அதன் பிரத்யேக இணையதளத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
WE THE LEADER என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அரசியல் அமைப்பில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தன்னார்வலர்களாக இணையுமாறு அண்ணாமலை அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, 11 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்து தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
















