சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனை முன்னிட்டு பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் 10 முன்னாள் எம்.எல்.ஏக்கள் நீண்ட நேரமாக தவெக அலுவலகம் முன்பாக காத்திருந்தனர். கட்சி அலுவலகத்தின் உள்ளே நுழைவதில் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களிடையே தள்ளு – முள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்குள் கட்சியில் இணைய உள்ளவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன் உள்ளிட்டோரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அனைவரும் தவெகவில் இணந்தனர். அவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார்.
















