மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்தது!
Jul 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்தது!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்துள்ளது.

குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவ மழை பொய்த்துப் போனதால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 792 கன அடியிலிருந்து 549 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தொடர்ந்து, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது, 17.79 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விடப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும், ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கும் என்பதால் சுரங்க மின் நிலையத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு அணையின் கீழ் மட்ட மதகுகள் வழியாகப் பாசனத்திற்குத் திறக்கப்படும். இதனால், சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: metur dam
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு !

Next Post

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies