"ஒரே நாடு ஒரே தேர்தல்": ஆராய குழு அமைப்பு!
Oct 3, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: ஆராய குழு அமைப்பு!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் “ஒரே நேரத்தில் தேர்தல்” நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தற்போது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, மாநில அரசுகள் கவிழும்போதும், கட்சித் தாவல், வேட்பாளர் மறைவு போன்ற காரணங்களாலும் இடைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மாநில சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் நீண்ட கால இடைவெளியில் தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தல்களின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்போது, மத்திய அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள், அம்மாநில மக்களுக்கு அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

அதேசமயம், ஒரே தேர்தலாக நடத்தினால் இதுபோன்ற குழப்பங்களும், இடையூறுகளும் தவிர்க்கப்படும். மேலும், பண விரயமும், நேர விரயமும் தவிர்க்கப்படுவதோடு, ஒரே தேர்தலாக நடத்தும் போது நிர்வாகத்திறனையும் மேம்படுத்த முடியும்.

இதன் காரணமாகவே,அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவிவரும் நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” நடைமுறைக்கு சாத்தியமா? என்பது குறித்து ஆராய சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது.

குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இக்குழுவின் உறுப்பினர்கள் யார்? யார்? என்பது  பின்னர் அறிவிக்கப்படுபடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், “வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்து,ஒரு மாதம் ஆவதற்குள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டியிருப்பது “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற சட்ட மசோதாவை அமல்படுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேவையற்ற பீதியையும் அச்சத்தையும் உருவாக்குகின்றன. இத்திட்டம் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் வர வேண்டும். அதனடிப்படையில் ஆராய்ந்துதான் முடிவெடுக்கப்படும். மேலும், 1951 முதல் 1967-ம் ஆண்டுவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தியத் தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், நிதி ஆயோக் ஆகியவை ஏற்கெனவே ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags: one nation one election
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கியுள்ளது- யூடியூப்.

Next Post

தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies