இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!
Jan 14, 2026, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான பிரபுநாத் சிங், தனது ஆதரவாளர்களுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், தரோகா ராய், ராஜேந்திர ராய், ஸ்ரீமதி தேவி ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். இவர்களில் தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ஸ்ரீமதி தேவி படுகாயமடைந்தார். இதுகுறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சரண் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுநாத் சிங் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பாட்னா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததாகக் கூறி பிரபுநாத் சிங் 2008-ல் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பாட்னா உயர் நீதிமன்றமும் 2012-ல் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகையை பீகார் மாநில அரசும், குற்றவாளியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtlalu prasad yadavbihar mprjd party
ShareTweetSendShare
Previous Post

மாதிரி வாக்கெடுப்பு: 70% வாக்குகளுடன் தர்மன் முன்னிலை!

Next Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies