இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!
Sep 5, 2025, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான பிரபுநாத் சிங், தனது ஆதரவாளர்களுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், தரோகா ராய், ராஜேந்திர ராய், ஸ்ரீமதி தேவி ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். இவர்களில் தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ஸ்ரீமதி தேவி படுகாயமடைந்தார். இதுகுறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சரண் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுநாத் சிங் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பாட்னா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததாகக் கூறி பிரபுநாத் சிங் 2008-ல் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பாட்னா உயர் நீதிமன்றமும் 2012-ல் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகையை பீகார் மாநில அரசும், குற்றவாளியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtlalu prasad yadavbihar mprjd party
ShareTweetSendShare
Previous Post

மாதிரி வாக்கெடுப்பு: 70% வாக்குகளுடன் தர்மன் முன்னிலை!

Next Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Related News

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies