சனாதன தர்மம் நித்தியமானது, அதற்கு ஒரு தோற்றமும் முடிவும் இல்லை, இங்கே படிநிலை இல்லை, அனைவரும் சமம் என சனாதன தர்மத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
DMK dimwits often dwell on matters that are beyond their level of comprehension.
Hinduism or Sanathana Dharma is a way of life!
Religion, by its very nature, will have doctrines. Sanatana Dharma doesn’t have doctrines. It’s free. It flows like water. It doesn’t tell how to… pic.twitter.com/467VMkJtYK
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
தி.மு.க.வினர் பெரும்பாலும் தங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். இந்து மதம் அல்லது சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை!
மதம், அதன் இயல்பிலேயே, கோட்பாடுகளைக் கொண்டிருக்கும். சனாதன தர்மத்திற்கு கோட்பாடுகள் கிடையாது. இது சுதந்திரமானது. அது தண்ணீர் போல் ஓடுகிறது.
கடவுளிடம் எப்படி ஜெபிக்க வேண்டும், எப்போது கடவுளிடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
சில ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகள் தங்களை ஒரு மதம் என்று அழைத்தபோது, சனாதன தர்மமும் தன்னை ஒரு மதம் என்று அழைக்க வேண்டியிருந்தது என 1893 இல் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் மையக்கருவில் இடம்பெற்றுள்ளது.
உலகத்தில் இராமசாமி மட்டும் இருக்கும்போது, அது எளிதானது. இரண்டு இராமசாமிகள் இருக்கும்போது, வேறுபடுத்துவதற்கு இனிஷியல் தேவை.
எந்த மதத்தின் கருத்துக்கும் முற்பட்டது சனாதன தர்மம். தர்மம் நித்தியமானது, அதற்கு ஒரு தோற்றமும் முடிவும் இல்லை. இங்கே படிநிலை இல்லை, அனைவரும் சமம். இந்த தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது.
அதனால்தான் இது காலமற்றது, எந்த மதத்தையும் அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை, மேலும் அதில் உள்ள பல்வேறு நம்பிக்கைகளுக்கு இடமளிக்கிறது, என தெரிவித்துள்ளார்.