எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவரை ஒரு மாதத்தில் மட்டும் 6,32,444 பேர், எக்ஸ் தளத்தில் பின்தொடரத் தொடங்கி உள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பெற்றுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அவரை புதிதாக 2,67,419 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர்.
சமூக வலைதளங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை விட பா.ஜ.,வின் தலைவர்களே மக்கள் அதிகம் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 11,66,140 பாலோயர்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் கூடுதலாக பெற்று முதலிடத்திலும், பிரதமர் மோடி 2வது இடத்திலும், 4,74,011 புதிய பாலோயர்களுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவை, கடந்த மாதத்தில் மட்டும் புதிதாக 11,66,140 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர். சந்திரயான் 3 திட்டம், ஆதித்யா எல்1 திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சர்வதேச அரங்கில் இஸ்ரோவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.