உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .
Sep 30, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .

Web Desk by Web Desk
Sep 6, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் ஒழிக்க வேண்டும், அதை எதிர்ப்பதைவிட, ஒழிக்க வேண்டும் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ, 153 பி, 295 ஏ, 298, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர், குறிப்பாக, அமைச்சராகவும் உள்ளார். இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவரது இந்த பேச்சு லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

 

மேலும், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை விதைப்பது, வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, கிரிமினல் வழக்கு தொடர, சட்டப் பிரிவு 196-ன் படி உங்களது மேலான அனுமதி தேவைப்படுகிறது. எனவே, தாங்கள், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கவேண்டும் என அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் எக்ஸ் பதிவில், ” திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர, ஏற்கனவே பல முக்கியதர்கள் மேதகு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், சுவாமியின் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags: bjpsubramanian swamy
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்தனமாகப் பேசிய உதயநிதி! – அண்ணாமலை.

Next Post

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies