உலக வளர்ச்சியில் "ஆசியான்" முக்கியப் பங்கு!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

ஆசியான் மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 7, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாடுகளில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி, நேற்று இரவு 8 மணியளவில் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 4 மணியளவில் ஜகார்த்தாவை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இந்தோனேஷியா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, காலை 7 மணியளவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தாண்டுக்கான கருப்பொருள் ஆசியான் வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகின்றன. ஆசியான் வளர்ச்சியின் மையமாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சியில் ஆசியான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. ஆகவே, ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. கடந்தாண்டு நாங்கள் இந்தியா ஆசியான் நட்பு தினத்தை கொண்டாடி , ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறும், இந்தியாவையும் ஆசியாவையும் இணைக்கின்றன. குறிப்பாக, அமைதி, செழிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை நம்மை ஒன்றிணைக்கிறது.

அந்த அடிப்படையில் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை நான் வாழ்த்துக்கிறேன். இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியான் திகழ்கிறது. மேலும், இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கும். உலக நிச்சயமற்ற சூழலில் கூட, ஒவ்வொரு துறையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags: PM ModiAsean India Summit 2023Speech
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை

Next Post

சனாதன தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies