சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
Oct 26, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பணி.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், எங்களால் 6 மாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோலதான் சட்டமன்றத்துக்கும் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ElectionElection commissionermadhya pradeshinterviewAssembly
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட இயக்குநர் அமீரை கைது செய்க – இந்து முன்னணி கோரிக்கை!

Next Post

உதயநிதி கன்னத்தில் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு – ஆந்திராவில் பரபரப்பு!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies