சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பணி.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், எங்களால் 6 மாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோலதான் சட்டமன்றத்துக்கும் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: madhya pradeshinterviewAssemblyElectionElection commissioner
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட இயக்குநர் அமீரை கைது செய்க – இந்து முன்னணி கோரிக்கை!

Next Post

உதயநிதி கன்னத்தில் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு – ஆந்திராவில் பரபரப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies