சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
Sep 13, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 12:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பணி.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், எங்களால் 6 மாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோலதான் சட்டமன்றத்துக்கும் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ElectionElection commissionermadhya pradeshinterviewAssembly
Share
Tweet
SendShare
Previous Post

திரைப்பட இயக்குநர் அமீரை கைது செய்க – இந்து முன்னணி கோரிக்கை!

Next Post

உதயநிதி கன்னத்தில் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு – ஆந்திராவில் பரபரப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies