ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்
Jul 23, 2025, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்

Web Desk by Web Desk
Sep 7, 2023, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் தமிழக பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் செப்.07-ம் தேதி (இன்று) சந்தித்தனர். அப்போது, அவர்கள் ஆளுநரிடம் 2 கடிதங்களை வழங்கினர்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சனாதனத்தை ஒழிப்போம் என்று, உலகம் முழுவதும் வாழும் 130 கோடி இந்துக்களை புண்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

சனாதனத்தை ஒழிப்போம் என்பதே, இந்துக்களை ஒழிப்போம் என்று கூறுவதாகத்தான் அர்த்தம். இந்து தெய்வங்களை வணங்கும் நபர்களை எதிர்ப்போம், ஒழிப்போம் என்பதுதான் அதன் பொருள். தமிழகத்தில் உள்ள 8 கோடி இந்துக்களை ஒழிப்போம் என்றுதான் அதற்கு அர்த்தம்.

கடவுள் நம்பிக்கை நிறைந்த மாநிலம் தமிழகம். உலகத்துக்கே வழிகாட்டும் மாநிலமும் தமிழகம்தான். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த தமிழகத்தில் இருந்து கொண்டு, அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, அந்த உறுதிமொழிக்கு எதிராக உதயநிதி நடந்து கொண்டுள்ளார்.

இது வன்முறை என்ற நஞ்சை விதைக்கும் பேச்சு. எனவே, அமைச்சர் பதவி வகிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை. எனவே, அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எங்களது மாநிலத் தலைவரின் கடிதத்தை, ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.

அதேபோல், இந்து சமய அறநிலையத்துறையில் இருப்பவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும் என்று விதி உள்ளது. இந்து மதத்துக்கு எதிராகவோ, மத உணர்வுகளுக்கு எதிராகவோ செயல்படமாட்டேன் என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அதிகாரிகளே உறுதிமொழி எடுக்கும்போது, அந்த துறையின் அமைச்சர் எவ்வளவு பொறுப்புள்ள நபராக இருக்க வேண்டும். இது அமைச்சர் சேகர் பாபுவுக்கு தெரியவில்லை.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டது தவறு. எனவே, சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

Tags: bjp annamalaibjp tamilnadugoverner ravirajbhavan
ShareTweetSendShare
Previous Post

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.4 – மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Next Post

உதயநிதியை நாடே வெறுக்கிறது!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies